Sunday 19th of May 2024 10:58:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
தென்மராட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலி!

தென்மராட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவுக்கு பலி!


யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் மேற்கு, கல்வயல் கிராமத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணுக்கு கடந்த 13 ஆம் திகதி கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அவருடைய உடல்நிலையை கருத்தில்கொண்டு அதே நாள் கொழும்பு மஹரகம கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்த நிலையில் அங்கு இன்று அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவருக்கு வயது 59 என்று தெரியவந்துள்ளது.

இன்று காலை வடமராட்சியின் கரவெட்டியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE